கானா ஊரிலே
கானா ஊரிலே
இயேசு திருமண வீட்டிலே
முதல் அற்புதம் செய்தாரே
தண்ணீர் ரசமாய் மாறிற்றே
இருமனம் ஒன்றாய் இணையும் நேரம்
இணைக்கும் கர்த்தர் மகிழும் நேரம்
முப்பிரி நூல் அறாதே-நம் இயேசுவில்
இணைந்தால் அறாதே
மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல நல்லதல்ல
ஏற்ற துணையை உண்டாக்கினார் (2)
இதுமுதல் தகப்பன் தாயை பிரிந்து
இருவரும் ஒன்றாய் இணையச்;செய்தார்;
குடும்பம் உருவானதே மகிழ்ச்சி நிறைவானதே
சபை கர்த்தருக்கு கீழ்படியும் கீழ்படியும் அதுபோல
புத்தியுள்ள மனைவி இருப்பாள்(2)
அன்பு கூர்ந்த்து ஜீவன் கொடுத்தார்
புருஷனை அவர்போல் காணச்சொன்னார்
போஷித்து காப்பாற்று
நீ நேசித்து காத்திடு
தேவன் இணைத்ததால் ஒருபோதும் பிரியாதீர் பிரியாதீர்
தேவகோபம் உன்மேல் வருமே(2)
வாழ்விலும் தாழ்விலும் எல்லாநிலையிலும்
ஜெபித்து ஒன்றாய் வாழ்ந்திடுவீர்
விவாகம் கனமுள்ளதே
பரிசுத்தம் பிழையற்றதே
வாழ்த்துகிறோம் (2) நீடூழி வாழ வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் (2) பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்